/* */

மதுரை அருகே பறக்கும் படையினர் சோதனையில் ரூ.78 ஆயிரம் பறிமுதல்

மதுரை அருகே, பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.78 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

மதுரை அருகே பறக்கும் படையினர் சோதனையில் ரூ.78 ஆயிரம் பறிமுதல்
X

பரவை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினரின் சோதனையில், காரில் உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்டவ் ரூ.78690 பறிமுதல் செய்யப்பட்டது. 

தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரச்சார பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மதுரை பரவை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க கொண்டு செல்லப்படுகிறதா, என்பதனை கண்காணிக்க தீவிர வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர்.

அப்போது, பரவை - மதுரை சாலையில் வேகமாக சென்ற காரை மடக்கி வாகனச் சோதனை செய்தபோது, மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த ஆதிநாராயணன் என்பவர் உரிய ஆவணங்களின்றி ரூ.78690 பணத்தை காரில் எடுத்து வந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்த சமயநல்லூர் போலீசார் மற்றும் பறக்கும் படை தாசில்தார் சரவண பெருமாள், பணத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Updated On: 8 Feb 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?