/* */

மேலூர் பாசனக் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட ஓட்டுனர்

மேலூரில், குடிபோதையில் பாசன கால்வாயில் விழுந்து ஓட்டுனர் உயிரிழந்தார். அவரது உடல் மீட்கப்பட்டது.

HIGHLIGHTS

மேலூர் பாசனக் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட ஓட்டுனர்
X

மதுரை மாவட்டம், மேலூர் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் ,தனியார் வாகன ஓட்டுனராக பணியாற்றி வந்தார். நேற்று மாலை முதல், விஜயகுமார் வீடு திரும்பாததால், பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடிவந்தனர்.

இதனிடையே, மேலூர் பகுதியில் உள்ள பெரியார் பாசன கால்வாயில் , விஜயகுமார் சடலமாக மீட்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, மேலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், விஜயகுமார் குடிபோதையில் பாசனக் கால்வாய் தண்ணீர் விழுந்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

Updated On: 5 Nov 2021 7:45 AM GMT

Related News