/* */

மதுரை அருகே மேலூரில் கொரோனா விழிப்புணர்வு: ஆட்சியர் தொடங்கி வைத்தார்

கொரோனா தொடர் விழிப்புணர்வு பிரச்சாரத்தினை மேலூர் அருகே சூரக்குண்டு பகுதியில் மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

மதுரை அருகே மேலூரில் கொரோனா விழிப்புணர்வு: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
X

கொரோனா தொடர் விழிப்புணர்வு பிரச்சாரத்தினை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் தொடங்கி வைத்தார்

மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது,

இதன் ஒருபகுதியாக, தொடர் விழிப்புணர்வு பிரச்சாரத்தினை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், மேலூர் அருகே சூரக்குண்டு பகுதியில் தொடங்கி வைத்து, கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக வீதி நாடகம் நிகழ்வு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது,

மேலும் இந்நிகழ்ச்சியில் தடுப்பு போடப்படும் நிகழ்வை பார்வையிட்ட அவர், இத்தொற்றை தடுத்து பாதுகாப்பாக இருக்கும் வகையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை பொதுமக்களுக்கு வழங்கினார். முன்னதாக மேலூர் அருகே சிட்டம்பட்டி சுங்கச்சாவடி பகுதியில் கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக வாகன ஓட்டிகளுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்ட அவர், முககவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் முககவசம் அணிவதின் அவசியத்தை வலியுறுத்தினார்,

இந்நிகழ்ச்சியில், மேலூர் வருவாய் கோட்டாசியர் பிர்தௌஸ் பாத்திமா, மேலூர் வட்டாசியர் இளமுருகன், மேலூர் கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி, உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் லதா, வட்டார மருத்துவ அலுவலர் சிவநேசன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜபார் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Updated On: 4 Aug 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது