/* */

மதுரையில் இளைஞரை வெட்டி படுகொலை செய்த ஆறு பேர் கொண்ட கும்பல்

எஸ் .எஸ். காலனி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

HIGHLIGHTS

மதுரையில் இளைஞரை வெட்டி படுகொலை செய்த  ஆறு பேர் கொண்ட கும்பல்
X

கொலையாளிகளைத்  தடுக்க முயற்சி செய்தபோது தாக்கப்பட்ட  பிரகாஷின் சித்தி வாசுகி

மதுரையில் இளைஞரை ஆறு பேர் கொண்ட கும்பல் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மதுரை எஸ். எஸ். காலனி காவல் எல்லைக்குட்பட்ட எல்லிஸ் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் ( 25.). ஆட்டோ மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் வீட்டு வாசலில் செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது, ஆறு பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் புகுந்து அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிக்க முயற்சித்தனர். அதை தடுக்க முயற்சி செய்த பிரகாஷின் சித்தி வாசுகியையும் வெட்டி விட்டு அந்த கும்பல் தப்பிச்சென்றது.

மேலும், சம்பவம் குறித்து தகவல் அறிந்த எஸ் .எஸ். காலனி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, காயம் பட்ட வாசுகியை 108 அவசர கால ஊர்தி மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே பகுதியில் இரட்டை கொலை நடந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

Updated On: 28 Aug 2022 3:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  2. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  3. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  4. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  6. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  8. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!