மதுரையில் அட்சய பாத்திரம் 150வது நாள் விழா: அன்னதானம் வழங்கல்
கொரோனா பரவலை தொடர்ந்து, ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மதுரை மாநாகரில், சாலை ஓரங்களில் வசித்தவர்கள் பலர் உணவு இன்றி சிரமம் அடைந்தனர். அத்தகையவர்களுக்கு உணவு அளிக்கும் வகையில், மதுரையில் அட்சய பாத்திரம் டிரஸ்ட் சார்பில் இயலாதவர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது.
இது தொடங்கி, நேற்றுடன் 149 நாள் நிறைவடைந்து, இன்று 150 வது நாளில் இந்த அறக்கட்டளை அடியெடுத்து வைத்துள்ளது. இதை முன்னிட்டு, மதுரை அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக வந்தவர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் அட்சய பாத்திரம் டிரஸ்ட் சார்பில் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், திரைப்பட நடிகர் பயில்வான் ரங்கநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசும் போது, தானத்தில் சிறந்தது அன்னதானம். கொரானா மூன்றாம் அலை பரவி வரலாம் என்று அஞ்சும் சூழலில், பொது மக்கள் எல்லோரும் இரண்டு தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும். சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். புகைப்பழக்கம் மதுப்பழக்கம் உள்ளிட்டவர்களை தவிர்க்க வேண்டும் என்றார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் டாக்டர் ரத்தினவேல் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட 3000 முன்னாள் ஆளுநர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். உதவி ஆளுநர் கார்மேகம் வாழ்த்துரை வழங்கினார். கிழக்கு ரோட்டரி சங்க செயலாளர் ஜெகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவின் ஏற்பாடுகளை, மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் தலைவர் நெல்லை பாலு செய்திருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu