Begin typing your search above and press return to search.
மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் மரியாதை
மதுரையில் கலைஞர் நூலகம் அமையவுள்ள இடம், ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளையும் தமிழக முதல்வர் ஸ்டாலின ஆய்வு செய்கிறார்
HIGHLIGHTS
மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள மகாத்மா காந்தி உருவச்சிலைக்கு தமிழக முதலமைச்சர் இன்று மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
காந்தி ஜயந்தியை முன்னிட்டு மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி உருவச்சிலைக்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து, மதுரையில் கலைஞர் நூலகம் அமையவுள்ள இடம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளையும் தமிழக முதல்வர் ஸ்டாலின ஆய்வு செய்கிறார். மேலும் மதுரையில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினுடன், அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், பி. மூர்த்தி, மதுரை எம்.பி. வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.