சைவநெறி மீட்புப்பேரவை புனித யாத்திரை: மதுரை ஆதீனம் தொடங்கி வைத்தார்

சைவநெறி மீட்புப்பேரவை புனித யாத்திரை: மதுரை ஆதீனம் தொடங்கி வைத்தார்
X
சைவநெறி மீட்புப்பேரவை சார்பில் நடைபெறும் புனித யாத்திரையை, மதுரை ஆதீனம் தொடங்கி வைத்தார்.

மதுரையில், சைவநெறி மீட்புப் பேரவை சார்பில், பண்டரிபுரம் பாண்டுரங்கன் புனித ஷேத்திரத்திற்கு புனித யாத்திரை பயணம் மேற்கொள்ளப்படுகிறது. பேரவை ஒருங்கிணைப்பாளர் வீரமுருகன் தலைமையிலான புனித யாத்திரையை முன்னிட்டு, மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஸ்ரீ ஞானசம்பந்த பரமச்சாரிய சுவாமிகள் தலைமையில், ஆதீன மடத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

பின்னர், புனித யாத்திரையை, குரு மகா சன்னிதானம் ஆசீர்வாதத்துடன் தொடங்கி வைத்தார். இதில், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மற்றும் ஏராளமான சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!