/* */

மதுரையில் சாலை பணியின் போது கண்டெடுக்கப்பட்ட சதுஸ்ர சிவலிங்க சிலை

ஐராவதநல்லூர் அருகே கொந்தகை கால்வாய் பகுதியில் சாலையை தோண்டியபோது 2 அடி உயரமுள்ள லிங்க கற்சிலை கிடைத்தது

HIGHLIGHTS

மதுரையில் சாலை பணியின்போது சதுஸ்ர சிவலிங்க சிலை கண்டெடுக்கப்பட்டது

மதுரை தெப்பக்குளம் முதல் விரகனூர் இடையே 60 அடி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் , நேற்றிரவு ஐராவதநல்லூர் இந்திராகாந்தி சிலை அருகே கொந்தகை கால்வாய் பகுதியில் உள்ள சாலையை தோண்டியுள்ளனர். அப்போது, 2அடி உயரமுள்ள சதுஸ்ர லிங்க கற்சிலை ஒன்று கிடைத்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சிலைக்கு மாலை அணிவித்து தரிசனம் செய்தனர்.

இதனையடுத்து, அந்த சிவலிங்க சிலை, ஐராவதநல்லூர் கிராம நிர்வாக அதிகாரி சுரேஷ் மூலமாக, தெற்கு தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் மூலமாக மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியக காப்பாளர் மருதுபாண்டியிடம் ஒப்படைக்கப்பட்டது.

முதற்கட்ட ஆய்வில் ,சதுஸ்ர வடிவ லிங்க வழிபாடு கிபி 10 மற்றும் 11ஆம் ஆண்டுகளில் பயன்பாட்டில் இருந்துள்ளது என்பதால் ,இது கிபி 11ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் எனவும் முழுமையான ஆய்வுக்கு பின்னர் தெரியவரும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 24 Sep 2021 5:48 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!