மதுரையில் பக்ரீத் பண்டிகை, பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது

மதுரையில் பக்ரீத் பண்டிகை, பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை  நடத்தப்பட்டது
X
மதுரையில் பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் மகளிர், குழந்தைகள் உள்ளிட்டோர் சிறப்புத் தொழுகை நடத்தினர்

பக்ரித் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்கள் நடைபெற்ற சிறப்பு தொழுகை

தியாகத்திருநாள் என்னும் பக்ரித்பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட மகபூப்பாளையம், நெல்பேட்டை, ஹாஜிமார்தெரு, கோரிப்பாளையம், சிலைமான், மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் பக்ரித் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இந்த சிறப்பு தொழுகையில், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். தொழுகையின் முடிவில், இஸ்லாமிய பேச்சாளர்கள் பக்ரீத் பண்டிகையின் நடைமுறைகள் மற்றும் நன்மைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, இறைவனுக்காக தங்களின் கடமையை நிறைவேற்றும் வகையில், ஆடுகளைபலியிட்டு அதன் இறைச்சிகளை ,ஏழை எளிய மக்களுக்கு வழங்கி தியாகத்திருநாள் கடமையை நிறைவேற்றினர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக திடல்களில் தொழுகை நடத்த அனுமதி இல்லாத நிலையில், பள்ளிவாசல்களில் கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி தொழுகையை நடத்தினர். பக்ரித் பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய பின் இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டனர்.

Tags

Next Story