/* */

மதுரை அருகே இளைஞர் குத்திக் கொலை - பரபரப்பு

மதுரையில் நண்பரின் தந்தை தாக்கப்பட்டத்தை தட்டிகேட்ட இளைஞர் குத்திகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

மதுரை அருகே இளைஞர் குத்திக் கொலை - பரபரப்பு
X

மதுரை விராட்டிபத்து பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர், எச். எம். எஸ் காலனி புதுவாழ்வு நகரில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வருகிறார். பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆசாரி கணேசன் மகன் அருண் பிரகாஷ் என்பவருக்கும், கணேசனுக்கும் இடையே, ஜல்லி மணல் கொட்டியது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரம் அடைந்த அருண் பிரகாஷ், காவலாளியை கீழே தள்ளி தாக்கியதாக கூறப்படுகிறது. காவலாளி கணேசன் இதுதொடர்பாக தனது மகன் கௌதமிடம், செல்போன் மூலம் நடந்தவற்றை கூறியுள்ளார். இதையடுத்து கௌதம், மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் லோடுமேன் வேலை பார்க்கும் விக்னேஷ் (வயது 22) என்பவர் உள்ளிட்ட சிலருடன் வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது ஆவேசமடைந்த அருண் பிரகாஷ், வீட்டில் இருந்த கத்தியால் விக்னேஷை, சரமாரியாக குத்தியதில், அவர் படுகாயம் அடைந்ததார். அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். சிகிச்சை பலனின்றி விக்னேஷ் இறந்து விட்டார். இதுகுறித்து, மதுரை எஸ் எஸ் காலனி போலீசார் வழக்குப் பதிவு செய்து, அருண்பிரகாஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 11 Sep 2021 12:43 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்