மக்கள்நீதிமய்யம் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மக்கள்நீதிமய்யம் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
X

மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மையம் வேட்பாளர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து பிரசாரம் செய்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவிற்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதில் மதுரை வடக்குத் தொகுதி மக்கள் நீதி மையம் வேட்பாளர் அழகர், அண்ணாநகர் இந்திரா காலனி பகுதியில் வாக்குகளை சேகரித்தார்.

அப்போது, மக்கள் நீதி மையம் நிர்வாகிகள் அண்ணாநகர் முத்துராமன், குணா அலி, நாகேந்திரன், அயூப்கான், ஆசைத்தம்பி உள்ளிட்டோர், வீடு வீடாகச் சென்று வாக்குகளை சேகரித்தனர். இதில் கூட்டணி கட்சிகள், மக்கள் நீதி மையத்தின் அனைத்து நிர்வாகி பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future education