மதுரை அருகே இளைஞர் படுகொலை:ஒரு நபர் கைது

மதுரை அருகே இளைஞர் படுகொலை:ஒரு நபர் கைது
X
மதுரை அருகே இளைஞர் படுகொலை, குற்றவாளிகள் தலைமறைவு

மதுரை அடுத்த குன்னத்தூரில் இளைஞர் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

மதுரை மாவட்டம், வரிச்சூர் அடுத்த குன்னத்தூரில் அடையாளம் தெரியாத 22 வயது மதிக்கத்தக்க இளைஞரை, மது போதையில் இருந்த அதேபகுதியை சேர்ந்த கும்பல் கொலை செய்து விட்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கருப்பாயூரணி போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒரு நபரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!