/* */

தொற்று பாதித்தவர்களுக்கு உணவு வழங்கும் தொழிலதிபருக்கு குவியும் பாராட்டு.

மதுரையில் கொரோனா பாதித்து வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டோருக்கு இலவசமாக உணவு வழங்கும் தொழிலதிபர்.

HIGHLIGHTS

தொற்று பாதித்தவர்களுக்கு உணவு வழங்கும் தொழிலதிபருக்கு குவியும்  பாராட்டு.
X

இலவச உணவு வழங்கும் தொழிலதிபர்

மதுரையில் போன் செய்தால் போதும் வீட்டிற்கே இலவசமாக உணவு கொடுத்து வரும் தன்னார்வலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகினறது.

மதுரை மாவட்டத்தில கொ ரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது.தற்போது , கடந்த நான்கு தினங்களாக குறைந்து வந்தாலும் வீட்டில் 7047 பேர் தனிமைப்படுத்தி கொண்டனர். அவர்கள் வெளியே வரமுடியாத சூழ்நிலையில் அவர்களுக்கு அத்தியாவசிய தேவை என்பது உணவுதான்.

அதுவும் சத்தான சுகாதாரமான உணவு தேவை என்பதை கருத்தில் கொண்டு மதுரை அண்ணாநகர் பகுதியில் சக்கரா ரெஸ்டாரண்ட் நடத்திவரும் அறிவழகன் தொற்று பாதிக்கப்பட்ட மற்றும் உடன் இருப்பவர்களுக்கு அவர்களின் வீட்டிற்கு சென்று இலவசமாக மூன்று வேளையும் உணவுகளை வழங்கி வருகிறார்.

உணவே நோய்க்கு அருமருந்து என்பதால் அறிவழகன் - லட்சுமி தம்பதியினர் தங்களது செல்போன் நம்பரை வாட்ஸ் அப் குழுக்கள், சமூக வலைதளங்களில் பதிவிட்டு தொற்று பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் உணவு தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள கேட்டுக்கொண்டார்.

அதன்படி , மதுரை வண்டியூர், கோமதிபுரம், மேலமடை, கே.கே. நகர், விரகனூர், முனிச்சாலை, அய்யர் பங்களா, பி.பி. குளம் என பல்வேறு பகுதிகளிலும் தொற்று பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் உடன் இருப்பவர்கள் இலவசமாக உணவுகளை பெற்று வருகின்றனர்.

இதற்காக பிரத்தியோக சமையலர் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களை நியமித்து இந்த சேவையை மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து அறிவழகன் கூறும்போது, தொற்று பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தி இருப்பவர்கள் போன் செய்தாலே போதும் அடுத்த நொடியே உணவை எடுத்துக்கொண்டு அவர்களின் இருப்பிடத்திற்கு சென்று உணவை இலவசமாக வழங்கி வருகிறோம் என்றும், மூன்று வேளையும் உணவு வழங்கி வருவதாகவும், தற்போது ஒரு நாளைக்கு 300 பேருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், கடந்த 10 நாட்களாக இந்த பணியை செய்து வருவதாகவும் மதுரை மாவட்டத்தில் ஒருவரும் கூட கொரோனா தொற்று இல்லை என்று சொல்லும் வரை இந்த பணியை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறினார். இவரது இந்த சேவையை, மதுரை மாவட்டத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டிலுள்ளவர்களும் பாராட்டி வருகின்றனர்.

Updated On: 3 Jun 2021 8:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  2. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  3. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  4. நாமக்கல்
    50 சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
  5. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக VanathiSrinivasan பேச்சு !...
  6. நீலகிரி
    ஊட்டியில் மலர் கண்காட்சி நாளை தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்
  7. நாமக்கல்
    கொல்லிமலையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க லாரிகள் மூலம் குடிநீர்...
  8. வீடியோ
    Savukku Shankar மீது கஞ்சா வழக்கு திமுக அரசின் கையாலாகாத்தனம்...
  9. இந்தியா
    விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...
  10. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் அருகே கோவில்களில் அடுத்தடுத்து கொள்ளை