/* */

மதுரை நகரில் ஆரம்ப சுகாதார நிலையத்தில், தடுப்பூசி தட்டுப்பாடு

மதுரை நகரில் ஆரம்ப சுகாதார நிலையத்தில், கோவிட்- 19 தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமமடைந்து வருகின்றனர்.

HIGHLIGHTS

மதுரை நகரில் ஆரம்ப சுகாதார நிலையத்தில், தடுப்பூசி தட்டுப்பாடு
X

பைல் படம்

மதுரை மாவட்டத்தில் கடந்த 3 வாரங்களாக தடுப்பூசி தட்டுப்பாடு அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சார்பாக இளங்கோ மாநகராட்சி பள்ளியிலும்,

மதுரை மாநகரில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சுகாதாரத் துறையினர் சார்பாக தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இன்று அன்சாரி நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்துவதற்காக ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். அப்போது, 44- வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

18-44 வயது வரை உள்ள நபர்களுக்கு தடுப்பூசி இருப்பு இல்லை எனவும், தெரிவிக்கப்பட்டது. அதேபோல், முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு 2-ம் தவணை தடுப்பூசிகளும் இருப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் சமூக இடைவெளி இன்றி மதுரை அன்சாரி நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் குவிந்து கொண்டு நின்றதால், அந்த பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே, டோக்கன் வாங்கியவர்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாகவும், தடுப்பூசி இருப்பு குறைவாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததால் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர்.

Updated On: 16 July 2021 5:01 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  2. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  3. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  6. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  8. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  9. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  10. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!