குவாரிகள் இயங்க அனுமதிக்க வேண்டும்: டிப்பர் லாரி உரிமையாளர் சங்கம் கோரிக்கை

குவாரிகள் இயங்க அனுமதிக்க வேண்டும்: டிப்பர் லாரி உரிமையாளர் சங்கம் கோரிக்கை
X

மதுரையில் குவாரிகளை திறக்க அனுமதி வழங்க கோரி டிப்பர் லாரி உரிமையாளர்கள்  கலெக்டரிம் மனு கொடுக்க வந்தனர்.

மதுரை மாவட்டத்தில் குவாரிகள் இயங்க அனுமதிக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மதுரையில் டிப்பர் லாரிகள் வைத்து கட்டுமானத்திற்கு தேவையான கிராவல், கிணற்று மண் மற்றும் எம்.சாண்ட் மண் சப்ளை செய்து வருகிறோம்.

ஆனால், கடந்த 4 மாதமாக அரசு அனுமதி பெற்று குவாரிகள் இயங்கவில்லை. அதனால், கட்டுமான தொழில் மற்றும் அதைச் சார்ந்த தொழிலாளர்கள் அனைவரும் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளோம்.

மதுரை மாவட்டத்தில் ,சுமார் 1500 டிப்பர் லாரிகள் மற்றும் 2500 டிரைவர்கள் குடும்பங்கள் மிக சிரமத்திற்கு உள்ளாகி, மேற்படி குவாரிகள் செயல்பட உதவி செய்யுமாறும், எங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டி கேட்டுக் கொள்கிறோம் என டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் கலெக்டரிடம் வழங்கிய மனுவில் தெரிவித்திருந்தனர்.

Tags

Next Story
ai robotics and the future of jobs