/* */

முல்லைப்பெரியாறு ஆயக்கட்டு பகுதியில் நடைபெறும் தண்ணீர் திருட்டை தடுக்க கடும் நடவடிக்கை

முல்லைப்பெரியாறு ஆயக்கட்டு பகுதியில் நடைபெறும் தண்ணீர் திருட்டை தடுக்க கடும் நடவடிக்கை: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

HIGHLIGHTS

முல்லைப்பெரியாறு ஆயக்கட்டு பகுதியில் நடைபெறும் தண்ணீர் திருட்டை தடுக்க கடும் நடவடிக்கை
X

முல்லைப்பெரியாறு ஆயக்கட்டு பகுதியில் நடைபெறும் தண்ணீர் திருட்டை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் .

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழக நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் மதுரை,தேனி மாவட்ட ஆட்சியர்கள் முன்னிலையில் முல்லைபெரியாறு அணையில் இருந்து பயனடையும் ஆயக்கட்டு விவசாயிகளை பாதிக்கும் தண்ணீர் திருட்டு பிரச்னை தொடர்பாகவும், அம்ரூத் திட்டத்தின் கீழ் முல்லைப்பெரியாறு லோயர் கேம்ப் பகுதியில் இருந்து நேரடியாக குழாய் வழியாக மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆய்வுக்கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் மேலும் பேசியது: முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வரக்கூடிய நீர் 2லட்சத்து 19.ஆயிரம் ஏக்கர் ஆயக்கட்டு பகுதிக்கு முறைப்படி வழங்கப்படவேண்டும்.

மதுரை,தேனி, திண்டுக்கல்,சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களை சேர்ந்த ஆயக்கட்டு விவசாயிகளுக்கு உரிமை உண்டு. அதில், குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு ,மதுரை மாவட்டத்தின் சில இடங்களில் இரண்டு போகத்திற்கு உரிமை உண்டு.

இன்றைய சூழ்நிலையில் கடந்த 15.ஆண்டுகளுக்கு பிறகு முதல்வர் முக ஸ்டாலின் ஆட்சியில் சரியான நேரத்தில் ஜூன் மாதத்தில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.இரண்டவது போக பாசனத்தை உருவாக்குகிற வகையில் முதல் போக பாசனத்திற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே, முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு வரும் நீர் திருடப்படுவது குறித்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதத்தில் சிறு, குறு விவசாயிகள் அல்லாதவர்கள் தண்ணீர் திருட்டை தொழிலாக கொண்டவர்களால், கனரக மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீர் முறைகேடாக எடுக்கப்படுகிறது என்பதை குறிப்பிட்டேன்.

சட்டத்திற்கு விரோதமாக பட்டா இடங்களிலும், பட்டா இல்லாத அரசு மற்றும் வனத்துறை இடங்களில் ஆக்கிரமிப்பு நிலங்களுக்கு இந்த தண்ணீர் எடுக்கப்பட்டு பல விவசாயிகள் ஆயக்கட்டிற்கு தண்ணீரை பெற முடியாமல் விவசாய தொழிலையே கைவிடக் கூடிய நிலைமை ஏற்பட்டது. பல இடங்களில் நஷ்டம் ஏற்பட்டது.

வன விலங்குகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது . ஊரக நகரம் பேரூராட்சி பகுதிகளில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது என்பதை அக்கடிதத்தில் குறிப்பிட்டேன். அதன் விளைவாக, ஆற்றின் இரு புறங்களிலும் முதன் முயற்சியாக மின் இணைப்பை துண்டித்தார்கள். ஒரே நாளில் வைகை அணைக்கு வந்து சேரும் நீர் 160 கன அடியாக அதிகரித்தது. பின்னர், முன்னாள் முதல்வர் மறைவிற்கு பிறகு தண்ணீர் திருட்டு தொடர ஆரம்பித்தது.

இதனை வெளிப்படையாகவே பொதுப்பணித்துறை வெளியிடக்கூடிய குறிப்புகள் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்கிற காரணத்துக்காகவே அதனை வெளியிடுவதை நிறுத்தி விட்டார்கள். இணைய தளத்தில் தகவல் வெளியிடுவதையும் நிறுத்தி விட்டார்கள் . இதற்கு பிறகு விவசாயிகள் சங்கம் சார்பில் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற உத்தரவிட்ட பிறகும்கூட மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, இந்த முறைகேட்டை தடுப்பதற்ககு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளதால், இத்தனை நாள் நடைபெற்று கொண்டிருந்த தவறை பொதுப்பணித் துறையினர் ,மின்சார துறையினர் இணைந்து யார் யார் இந்த தவறில் ஈடுபட்டுள்ளார்கள் ,எந்த அளவிற்கு தண்ணீர் திருடப்பட்டுள்ளது என ஆராய்ந்து வருகின்றனர்.

இந்த ஆய்வின் படி, தற்போதுள்ள தகவலின் படி 527 இடங்களில் ஆயக்கட்டு அமைப்பிற்கு விரோதமாக தண்ணீர் திருடப்படுகிறது. சிறு விவசாயிகள் பயன்படுத்திடாத 15 குதிரைத்திறன் கொண்ட மோட்டார்கள் பயன்படுத்தி மின்சாரத் துறைக்கு ஒரு நாளைக்கு முப்பது லட்சம் ரூபாய் வரையில் இழப்பை ஏற்படுத்தி உள்ளனர். இது போன்ற சமுதாய துரோகத்தை நினைத்து கூட பார்த்தது இல்லை .

அப்போது யார் ஆட்சி நடந்தது யார் பொறுப்பில் அந்த மாவட்டம் இருந்தது. அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் தெரியவரும். இதற்கு தனி நபர் காரணமாக இருக்க முடியாது . இதனை முதலமைச்சரின் கட்டளைப்படி முழுமையாக ஆய்வு செய்து மக்களுக்காக வெளிப்படைத்தன்மையுடன் கூடிய அரசை நடத்திட வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுகின்ற வகையில் முயற்சி இருக்கும் என்றார்.

எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்த போதே, எப்படி எல்லாம் குழாய்கள் பதிக்கப்பட்டு இந்த முறைகேடு நடந்தது என அப்போதே செய்தியாளர்களிடம் கூறினேன். இதனை மின்சாரதுறை அமைச்சர் செந்தில்பாலாஜி , நீர்பாசன துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் கவனத்திற்கு கொண்டு சென்று, இந்த தவறை திருத்தியே ஆகவேண்டும். விவசாயி கள் முழு பயனடையும் வகையில் இதனை செய்து முடிப்பது எனது கடமையாகும்.

புதிதாக பொறுப்பேற்றுள்ள தேனி ஆட்சியரிடம் இது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆய்வுகளுக்கு பிறகும் சரி வர முடிவுகள் வராவிட்டால், தனியாக தணிக்கை நடத்திடவும் நடவடிக்கை எடுப்போம். முதலமைச்சர் வழிகாட்டுதல்படி, அமைச்சர்களை ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுக்கப்படும். அம்ரூத் திட்டத்தில் கீழ் முல்லைப்பெரியாறு லோயர் கேம்ப் 125 MLT தண்ணீர் பெரும் திட்டத்தின் நிலை குறித்து ஆலோசித்துள்ளோம் .

இதன் நடைமுறை திட்டப்பணிகள் குறித்து ஆலோசித்துள்ளதோடு, மே-2023 -க்குள் இந்த பணிகளை முடித்து தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி, மதுரை மாவட்ட நகர்ப்புற பகுதிகள் தன்னிறைவு பெரும் வகையில் குடிநீர் கொண்டு வந்து, குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் . கடந்த 10 ஆண்டுகளாக வறண்டு போன வைகை நதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் மீண்டும் நீரோடும் நதியாக மாறும் என்றார் அமைச்சர் பழனிவேல்தியாகராஜன்.

Updated On: 7 July 2021 5:28 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொண்ணு மாப்பிள்ளையை வாழ்த்துவோம் வாங்க..!
  2. திருப்பரங்குன்றம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பலத்த மழை: கொடைக்கானலில், படகு போட்டி...
  3. லைஃப்ஸ்டைல்
    'ஓருயிராய் வாழ்வோம் வா'..என அழைக்கும் திருமண வாழ்த்து..!
  4. ஆன்மீகம்
    வரும் வியாழன் அன்று வைகாசி விசாகம்; தமிழ் கடவுள் முருகனை வழிபடுங்க..!
  5. உலகம்
    சீனாவில் பள்ளிக்குள் புகுந்து குழந்தைகளை கத்தியால் குத்திய பெண்
  6. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பெயரின் முதல் எழுத்து ‘எஸ்’ என ஆரம்பிக்கிறதா? - ரொம்ப...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    நூறு சதவீத கல்வி உதவி தொகையுடன் பட்டய படிப்பு குறித்த ஆலோசனை கூட்டம்
  8. ஈரோடு
    சித்தோடு அருகே அடுத்தடுத்து வந்த 3 கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி...
  9. லைஃப்ஸ்டைல்
    ரயில் பெட்டிகளில் வெள்ளை மற்றும் மஞ்சள் கோடுகள் இருப்பதை கவனித்து...
  10. லைஃப்ஸ்டைல்
    என்னுயிர் நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!