/* */

மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே அங்காடி கட்டும் பணி: மேயர் ஆய்வு

நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்

HIGHLIGHTS

மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே அங்காடி கட்டும் பணி: மேயர் ஆய்வு
X

பெரியார் பேருந்து நிலையம் அருகில் கட்டப்பட்டு வரும் பேரங்காடி கட்டுமான பணிகள் குறித்து மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆய்வு மேற்கொண்டார்

பெரியார் பேருந்து நிலையம் அருகில் கட்டப்பட்டு வரும் பேரங்காடி கட்டுமான பணிகள் குறித்து மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பெரியார் பேரங்காடி கட்டுமான பணிகளை, மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் , ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அவற்றில், பெரியார் பேருந்து நிலையம், சுற்றுலா தகவல் மையம், ஜான்சிராணி பூங்கா, குன்னத்தூர் சத்திரம் ஆகியவற்றில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் ,பெரியார் பேருந்து நிலையம் அருகில் ரூ.119.56 கோடி மதிப்பீட்டில் பேரங்காடி கட்டுமான பணிகள், பழைய சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் ரூ.44.20 கோடி மதிப்பீட்டில் பல்லடுக்கு வாகனம் நிறுத்துமிடம் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.அதன்படி, பெரியார் பேருந்து நிலையம் அருகில் கட்டப்பட்டு வரும் பேரங்காடி கட்டுமான பணிகள், அருகில் உள்ள பயணிகள் சுற்றுலா தகவல் மையத்தில் மேயர், ஆணையாளர் ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள ஜான்சிராணி பூங்கா வணிக வளாகம் மையம், குன்னத்தூர் சத்திரம், பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் ஆகிய இடங்களில் ஆணையாளர், ஆய்வு மேற்கொண்டு நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக, ஆணையாளர், ஆரப்பாளையம் கிராஸ் ரோடு கர்டர் பாலம்; பகுதியில் உள்ள கழிவுநீரேற்று நிலையம், மேலப் பொன்னகரம் 8வது தெருவில் பகுதியில் உள்ள உந்து கழிவுநீரேற்று நிலையம் மற்றும் பொன்மேனி பகுதியில் உள்ள உபகழிவுநீரேற்று நிலையம் ஆகிய கழிவு நீரேற்று நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, நகரப்பொறியாளர் லெட்சுமணன், செயற் பொறியாளர்கள் பாக்கியலெட்சுமி, பாஸ்கரன், உதவி செயற்பொறியாளர் சேகர், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவிப்பொறியாளர்கள் ஆறுமுகம், ஆரோக்கியசேவியர், தியாகராஜன், கந்தப்பா உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 6 Jun 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    புத்த பூர்ணிமா எப்படி கொண்டாடுகிறோம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகையும் மற்ற மாநிலங்களில் கொண்டாடும் விதமும்
  3. ஆன்மீகம்
    தமிழக கோயில்களில் யாழிக்கு தனி இடம் ஒதுக்க காரணம் என்ன?
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே கல்லறை தோட்டத்தில் சடலம் புதைக்க மக்கள் எதிர்ப்பு
  5. திருத்தணி
    காட்டுப்பன்றிகளுக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இளைஞர்கள் உயிரிழப்பு
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  8. இந்தியா
    பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தில் கடனுதவி! எப்படி வாங்குவது?
  9. சென்னை
    அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!
  10. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?