மதுரையில் மாநகராட்சி சார்பில் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் : மேயர் பங்கேற்பு

மதுரையில் மாநகராட்சி சார்பில் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் : மேயர் பங்கேற்பு
X

மதுரை மாநகராட்சி மேயர் தலைமையில் நடைபெற்ற  குறை தீர் சிறப்பு முகாம்

மதுரையில் மேயர் தலைமையில் குறைதீர் சிறப்பு முகாமில் ஏராளமான பொதுமக்கள் மனுக்களுடன் குவிந்தனர்

மதுரையில் மேயர் தலைமையில் குறைதீர் சிறப்பு முகாம் ஏராளமான பொதுமக்கள் மனுக்களுடன் குவிந்தனர்.

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி 3வது மண்டலத்தின் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் மனு முகாம் நடைபெற்றது வருகிறது.

இதில் பொதுமக்கள் புதை சாக்கடை, சாலை வசதி, குடிநீர் தொடர்பான மனுக்களை வழங்கி வருகின்றனர். பொது மக்களோடு சேர்ந்த கவுன்சிலர்களும் வருகை தந்து பணியாளர்கள் அதிகரிப்பு வார்டு தேவைகள் தொடர்பாகவும் மனுக்களை அளித்து வருகின்றனர். தொடர்ந்து மதுரை மாநகராட்சிக்கு மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் அடிப்படை வசதிகள் குறைபாடு குறித்து ஏராளமான பொதுமக்கள் மக்களாக மதுரை மேயர் மற்றும் துணை மேயரிடம் அளித்தனர்.

Tags

Next Story
ai in future agriculture