/* */

குடிநீர் குழாய் அமைக்கும் பணியில் உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு நிவாரணம்

குழாய் அமைக்கும் போது உயிரிழந்த ஈரோட்டைச் சேர்ந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு முதலமைச்சரின் நிவாரணநிதி வழங்கப்பட்டது

HIGHLIGHTS

குடிநீர் குழாய் அமைக்கும் பணியில் உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு நிவாரணம்
X

ம் ரூ.15 லட்சத்திற்கான காசோலைகளை உயிரிழந்தவரின் மனைவி தேவி, மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங் ஆகியோர் வழங்கினர்.

மதுரை மாநகராட்சிவிளாங்குடி பகுதியில் குடிநீர் குழாய் அமைக்கும் பணியின் போது நேரிட்ட விபத்தில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது

மதுரை மாவட்டம், மதுரை வடக்கு வட்டம், சாத்தமங்கலம் உள்வட்டம், விளாங்குடி கிராமம், ராமமூர்த்தி நகர் மெயின் வீதியில் மாநகராட்சி சார்பில், நடைபெற்ற வந்த குடிநீர் குழாய் அமைக்கும் பணியின்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மண்சரிவினால் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த வீரணன் என்ற சதீஷ் ( 34) என்பவர் உயிரிழந்தார். இவ்விபத்தில், உயிரிழந்த சதீஷ், மனைவி தேவி தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்குவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

அதன்படி , மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில், தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சத்திற்கான காசோலையும், தனியார் ஒப்பந்ததாரர் வழங்கிய நிவாரணத் தொகை ரூ.10 லட்சத்திற்கான காசோலை என மொத்தம் ரூ.15 லட்சத்திற்கான காசோலைகளை உயிரிழந்தவரின் மனைவி தேவி, மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங் ஆகியோர் வழங்கினர்.

Updated On: 4 Jun 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  4. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  5. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!
  6. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?
  7. அரசியல்
    அண்ணாமலைக்கு சிக்கல் : பாஜவில் என்ன நடக்கும்?
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் வெளுத்து வாங்கிய கனமழை: ஒரே நாளில் 812 மி.மீ மழை பதிவு
  9. செங்கம்
    செங்கத்தில் லாரி ஓட்டுநர் அடித்து கொலை
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் திமுக செயற்குழு கூட்டம்