/* */

ஊரக வேலை உறுதித்திட்டத்தில் பணிக்கு வருவோர் இணையதளத்தில் பதிவு: ஆட்சியர்

ஜனவரி 1 முதல் ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்களின் வருகை இணையதளத்தில் பதிவு செய்யப்படும் என ஆட்சியர் தகவல்

HIGHLIGHTS

ஊரக வேலை உறுதித்திட்டத்தில் பணிக்கு வருவோர் இணையதளத்தில் பதிவு: ஆட்சியர்
X

மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் (பைல் படம்)

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தற்போது 20-க்கும் குறைவான பணியாளர்கள் உள்ள பணிகளையும் இணையதளத்தில், வாயிலாக வருகையினை பதிவு செய்தல் 01.01.2023 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என, மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ்சேகர் தெரிவித்தார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் நடைபெறும் பணிகள் மற்றும் பணியாளர்களின் வருகை இதுவரை பதிவேடுகளில் பதிவு செய்து ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இத்திட்டத்தின் பணிகள் மற்றும் பணிபுரியும் பணியாளர்களின் வருகை விவரங்கள் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி உரிய நேரம் வரை பணிபுரிவதை உறுதி செய்யும் வகையில், இணையதளத்தில் பதிவாகும் வகையில்20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ள பணிகளில் பணிபுரியும் பணியாளர்களின் வருகையினை பதிவு செய்தல் 16.05.2022 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்தியஃமாநில அரசால் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது, 20-க்கும் குறைவான பணியாளர்கள் உள்ள பணிகளையும் (தனிநபர் திட்ட பணிகள் தவிர) இணையதளத்தில் பதிவாகும் வகையில்,வாயிலாக வருகையினை பதிவு செய்தல் 01.01.2023 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதி திட்டத்தின்கீழ் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் (மாற்று திறனாளிகள் உட்பட) காலை மற்றும் மதியம் தங்களின் வருகையினை தவறாமல் வாயிலாக பதிவு செய்தால் மட்டுமே தாங்கள் பணிக்கு வருகை தந்தது உறுதி செய்யப்பட்டு ஊதியம் வழங்க இயலும் எனவே, ஊராட்சி மன்ற தலைவர்கள் பணித்துணையாளர் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்கள் இதனை அறிந்து இதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ்சேகர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Updated On: 30 Dec 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  2. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  3. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  4. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  5. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  6. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  8. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  10. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...