/* */

இட ஒதுக்கீடு கோரி மதுரையில் பாமக, வன்னியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

இட ஒதுக்கீடு கோரி பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது

HIGHLIGHTS

இட ஒதுக்கீடு கோரி மதுரையில் பாமக, வன்னியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
X

மதுரையில் பாமக, வன்னியர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

வன்னியர்களுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு ஆணையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் , தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியலை விட்டு வெளியேற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி , பா.ம.க மற்றும் வன்னியர் சங்கம், தேவேந்திரர் மக்கள் நலச்சங்கம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் , பாமக மற்றும் வன்னியர் சங்கம் தேவேந்திரர் மக்கள் நல சங்கம் சார்பில் தேவேந்திர குல வேளாளர்களை பட்டியலை விட்டு வெளியேற்றம் செய்ய வேண்டும் மக்கள் தொகை அடிப்படையில் இட பங்கீடு வழங்கிடவும் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டு ஆணையை உடனடியாக நிறைவேற்ற கோரியும்,வன்னியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் நடராஜன் மற்றும் தேவேந்திரர் மக்கள் நலச் சங்கத் தலைவர் தேவேந்திரன் தலைமையிலும், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

இந்த ஆர்ப்பாட்டத்தில், பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் மற்றும் பாமக பொருளாளர் திலகபாமா கலந்து கொண்டு, கண்டன உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், பாமக மாவட்ட செயலாளர்கள் அழகர்சாமி, வீரக்குமார்,பா.ம க மற்றும் வன்னியர் சங்கம் தேவேந்திர குல வேளாளர், தமிழர் தேசிய கழகம். மல்லர் பேரராயம். புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

Updated On: 30 May 2023 1:00 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!