மதுரை மாநகராட்சி மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்

மதுரை மாநகராட்சி மேயர்  தலைமையில்  மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்
X
பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு மேயர் உத்தரவிட்டார்.

மதுரை மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது.

மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் ஆணையாளர் கே.ஜே.பிரவீன்குமார் முன்னிலையில், மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது.

மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்) அலுவலகத்தில் நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில், புதிய குடிநீர் குழாய் இணைப்பு,புதிய பாதாள சாக்கடை இணைப்பு மற்றும் திருத்தம் தொடர்பாக 22 மனுக்களும், நகரமைப்பு தொடர்பான 12 மனுக்களும், சொத்து வரி பெயர் திருத்தம் தொடர்பாக 13 மனுக்களும், சுகாதாரம் தொடர்பாக 1 மனுவும், இதர கோரிக்கை வேண்டி 2 மனுக்களும் என ,மொத்தம் 50 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து, மேயர் நேரடியாக பெற்றுக்கொண்டார். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு மேயர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து மண்டலம் 3 வார்டு எண்.61 வில்லாபுரம் பூ மார்க்கெட் பகுதியில், பாதாள சாக்கடை சரிசெய்யும் பணி மற்றும் தூய்மை பணிகள், வில்லாபுரம் புதுநகர் பகுதியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்குவதற்காக புதிதாக கட்டப்பட்டு வரும் குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமான பணிகள் மற்றும் அப்பகுதியில் குடிநீர் சீராக வழங்குவது குறித்தும் மேயர், ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதற்காக சிம்மக்கல், திரு.வி.க.தெரு பகுதியில் ,வீடு வீடாக விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இம்முகாமில், மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, செயற்பொறியாளர் (குடிநீர்) பாக்கிய லட்சுமி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி செயற்பொறியாளர் சேகர், உதவி வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணி, உதவி செயற்பொறியாளர்கள் இந்திராதேவி, முருகன், மாமன்ற உறுப்பினர்கள் போஸ் முத்தையா, கருப்பசாமி,வாசு, சுகாதார அலுவலர் வீரன் உதவி பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கொண்டனர்.

Tags

Next Story