பட்டா கிடைக்க வழி வகை செய்வேன்: மமக வேட்பாளர் உறுதி

பட்டா கிடைக்க வழி வகை செய்வேன்: மமக வேட்பாளர் உறுதி
X

மதுரை மாநகராட்சி 36-வது வார்டு பகுதியில் வாக்கு சேகரித்த மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் எம். சீனி அகமது ஜலால்தீன்

மதுரை மாநகராட்சி 36-வது வார்டு பகுதிகளில்,பட்டா கிடைக்க ஏற்பாடு செய்வேன் என மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர்

பட்டா கிடைக்க வழிவகை செய்வேன் என மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் உறுதிமொழி அளித்தார்.

மதுரை மாநகராட்சி 36-வது வார்டு பகுதிகளில்,பட்டா கிடைக்க ஏற்பாடு செய்வேன் என, மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் எம். சீனி அகமது ஜலால்தீன் வாக்கு சேகரிக்கும் போது தெரிவித்தார். மதுரை மாநகராட்சி 36 வது வார்டு பகுதிகளில், அவர் உலக உருண்டை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார்.

அப்போது, வாக்காளர்களிடம் அவர் கூறியது: பாதாள சாக்கடை இல்லாத தெருக்களில் செயல்படுத்துவேன், மாணவர்கள், இளைஞர்கள் நலனுக்காக இலவச உடற்பயிற்சி கூடமும், 36-வது வார்டுகளில், அனைத்து தெருக்களிலிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா அமைக்கப்படும், மருத்துவக் காப்பீடு திட்டம் அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்வேன் என்றார் அவர்.

Tags

Next Story
ai in future agriculture