நவராத்திரி விழா: ஊஞ்சலில் அருள்பாலித்த மதுரை மீனாட்சியம்மன்

நவராத்திரி விழா: ஊஞ்சலில் அருள்பாலித்த மதுரை மீனாட்சியம்மன்
X

மதுரை மீனாட்சியம்மன் கோயில் நவராத்திரி விழாவில்,  இன்று அம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் நவராத்திரி விழாவில், ஊஞ்சலில் வீற்றிருந்து அம்மன் அருள் பாலித்தார்.

நவராத்திரி விழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலும் இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இக் கோயிலில் நவராத்திரி விழாவானது நேற்று தொடங்கி, அக். 14.ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, தினசரி மாலை நேரங்களில், அம்மன் பல்வேறு அலங்காரங்களில் காட்சி அளிப்பார்.
முதல்நாளான நேற்றிரவு, ராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு, மீனாட்சியம்மன் காட்சி அளித்தார். இரண்டாம் நாளான இன்று மீனாட்சியம்மன், ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சியளித்தார். இதையொட்டி சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள் நடைபெற்றன. பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.

Tags

Next Story
ai in future agriculture