மதுரையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல்: அமைச்சர் திறந்து வைத்தார்
![மதுரையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல்: அமைச்சர் திறந்து வைத்தார் மதுரையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல்: அமைச்சர் திறந்து வைத்தார்](https://www.nativenews.in/h-upload/2022/04/15/1516736-img-20220415-wa0061.webp)
X
மதுரை மத்திய தொகுதியில் திமுக சார்பாக நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு விநியோகிக்கும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
By - N. Ravichandran |15 April 2022 2:31 PM IST
மதுரை மத்திய தொகுதியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று திறந்து வைத்தார்
கோடை வெப்பத்தில் இருந்து மக்களின் தாகத்தை காக்கும் வகையில், நீர் மோர் பந்தலை அமைக்க வேண்டும் என்று தி.மு.கவினருக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதன்படி, மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு நீர் மோர் பந்தலை, நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் இன்று திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், குளிர்பானங்கள், நுங்கு உள்ளிட்டவற்றை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில்,மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி மற்றும் திமுக கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu