/* */

மதுரையில், தீக்குளிக்க முயற்சித்த இளைஞரிடம் போலீஸார் விசாரணை

கொரோனா நோய் தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வங்கிக்குச் செலுத்த வேண்டிய கடனை செலுத்த முடியவில்லையாம்

HIGHLIGHTS

மதுரையில், தீக்குளிக்க முயற்சித்த இளைஞரிடம் போலீஸார் விசாரணை
X

வங்கியில் வாங்கிய கடனை உடனே கட்டச் சொல்லி மிரட்டுவதாக கூறி தீக்குளிக்க முயற்சித்த முதியவரிடம் காவல்துறையினர் விசாரணை:நடத்தி வருகின்றனர்.

மதுரை யாகப்பா நகரைச் சேர்ந்தவர் விவசாயி இக்பால். இவர் வங்கியில் விவசாயத்திற்காக 40 லட்ச ரூபாய் கடன் பெற்றிருக்கிறார். இதற்காக அவரது வீட்டை அடமானமாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வங்கியில் முறையாக கடன் செலுத்தவில்லை என கூறி வங்கி அலுவலர்கள் அவரது வீட்டை ஜப்தி செய்ய நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது . இந்த நிலையில் இன்று மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த இக்பால் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். அங்கிருந்த காவல்துறையினர் அதனை பறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயி, இக்பால் கூறுகையில், தான் வங்கியில் விவசாயத்திற்காக 40 லட்ச ரூபாய் கடன் பெற்றிருப்பதாகவும், இதற்காக தனது வீட்டை அடமானமாக வைத்து உள்ளதாகவும், கடந்த 3 ஆண்டுகளாக உடல் நலக்குறைவு, கொரோனா நோய் தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வங்கிக்குச் செலுத்த வேண்டிய கடனை செலுத்த முடியவில்லை. இதுவரை ஏழு லட்ச ரூபாய் செலுத்தி உள்ளதாகவும், நேற்று வங்கிக்கு சென்று 20 லட்ச ரூபாயை முன்பணமாக கட்டி, பின்பு தொடர்ச்சியாக வங்கிக்கு தர வேண்டிய நிலுவை தொகை கட்டுவதாகும் தெரிவித்திருக்கிறார், ஆனால் வங்கி அதிகாரிகள் வீடு ஜப்தி செய்தே தீருவோம் என கூறுவதாக வேதனை தெரிவித்தார். மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்க வந்த நிலையில், காவல்துறை விசாரணை செய்து வருவதாக தெரிவித்தார். தீக்குளிக்க முயற்சித்த இக்பாலிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 25 Oct 2021 5:22 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்