/* */

மதுரை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை விற்பனையா ? 3 பேர் மீது விசாரணை

குழந்தையைப் பெற்றெடுத்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வரும் கும்பலா என்பது குறித்தான சந்தேகம் போலீஸாருக்கு எழுந்துள்ளது

HIGHLIGHTS

மதுரை அரசு மருத்துவமனையில் பிறந்த   குழந்தை விற்பனையா ?   3 பேர் மீது விசாரணை
X

பைல் படம்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெண் குழந்தை விற்கப்பட்டதா என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று பெண்களை பிடித்து போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர்.

மதுரை ஆரப்பாளையத்தில் சந்தேகப்படும்படியாக வயதான பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் நின்று கொண்டிருந்தார். அப்பகுதியில் ரோந்து சென்ற காவல் ஆய்வாளர் முத்துமாரிக்கு. அந்த பெண்மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அந்தப்பெண்ணிடம் விசாரித்தபோது அவர் வைத்திருந்தது பிறந்து இரண்டு நாளான பெண் குழந்தை என்று தெரிய வந்தது.அந்த குழந்தை யாருடையது என்று மேலும் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

இதனால் அவரிடம் மேலும் விசாரணை நடத்தியபோது, மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்த பாண்டியம்மாள் கூறிய நிலையில், அவரது மகளை அழைத்து விசாரணை நடத்திய போது, அந்தப் பெண் கூறியது பொய் என்பது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து அந்தப் பெண்ணை மருத்துவமனை போலீசிடம் ஒப்படைத்தார். அங்கு போலீசார் நடத்திய விசாரணையில் உசிலம்பட்டி, காக்காரம்பட்டி ஒத்தவீடு நடுப்பட்டியை சேர்ந்த சின்னப்பாண்டி மனைவி பாண்டியம்மாள்(60,) கருப்பசாமி மனைவி பாண்டியம்மாள்(40,) இரும்பாலை நாகராஜன் மனைவி பாண்டியம்மாள், குழந்தையின் தாய் உட்பட ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். பிடிபட்ட பாண்டியம்மாள்(60,). அழகுபாண்டியம்மாள்(40,) மற்றொரு பாண்டியம்மாள்(40,) ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாலதி மற்றும் குழந்தையின் தாயை போலீசார் தேடி வருகின்றனர

மேலும் கடந்த சில நாட்களில் அரசு மருத்துவமனை அல்லாமல் வேறு ஏதும் மருத்துவமனைகளில் குழந்தைகள் பிறந்துள் ளதா, அதன் நிலை என்ன என்பது குறித்தும், விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. குழந்தையைப் பெற்றெடுத்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வரும் கும்பலா என்பது குறித்தான சந்தேகத்துடன் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தை யாருடைய குழந்தை என்பது குறித்தான விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.


Updated On: 29 March 2023 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  2. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
  3. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  4. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  5. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  6. தேனி
    பணி நிரவல் கலந்தாய்வினை கை விட ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை
  7. சூலூர்
    தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ கிரிக்கெட் போட்டி
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் கடம்பத்தூர் அருகே மத போதகரை அரிவாளால் வெட்டிய மகன்
  9. சிங்காநல்லூர்
    தேர்தல் ஆணையம் வாக்குப்பெட்டிகளை முறையாக கண்காணிக்க வேண்டும் :...
  10. திருப்பரங்குன்றம்
    வெடிகுண்டு மிரட்டலையடுத்து மதுரை விமான நிலையத்துக்கு போலீஸ்