காரியாபட்டி பேரூராட்சியில் தீவிர துப்புரவு பணி முகாம்
X
காரியாபட்டி பேரூராட்சியில் நடைபெற்ற தீவிர துப்புரவு பணி முகாம்
By - N. Ravichandran |22 March 2022 12:30 PM IST
விருதுநகர் மாவட்டம்,காரியாபட்டியில், பேரூராட்சி சார்பில் சிறப்பு துப்புரவு பணி முகாம் நடைபெற்றது
காரியாபட்டி பேரூராட்சியில் தீவிர துப்புரவு பணி முகாம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில், பேரூராட்சி சார்பில் சிறப்பு துப்புரவு பணி முகாம் நடைபெற்றது. இந்த முகாமை, பேரூராட்சி த் தலைவர் செந்தில் தொடக்கி வைத்தார். செயல் அலுவலர், மற்றும் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டனர். காரியாபட்டி நகரில் உள்ள, தெருக்களை சுத்தம் செய்து கால்வாயை தூர்வாரி இப் பணியானது மேற்கொள்ளப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, காரியாபட்டி பேரூராட்சி நிர்வாகம் செய்திருந்தது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu