மதுரையில் முன்மொழிந்தவர் வாபஸ் பெற்றதால் காங்கிரஸ் வேட்பாளர் திடீர் போராட்டம்

மதுரையில் முன்மொழிந்தவர் வாபஸ் பெற்றதால் காங்கிரஸ் வேட்பாளர் திடீர் போராட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பேச்சியம்மாள்.

மதுரையில் முன்மொழிந்தவர் வாபஸ் பெற்றதால் காங்கிரஸ் வேட்பாளர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

மதுரை மாநகராட்சி, 77 வது வார்டில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பேச்சியம்மாள் வேட்பு மனுவில் முன் மொழிந்த ரேவதி வாபஸ் பெற்றதால் வேட்பு மனு தள்ளுபடியாகும் நிலை ஏற்பட்டது.

இதனைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட துணைத் தலைவர் பூக்கடை கண்ணன் தலைமையில் மண்டலம் 4 அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதில் 20 பெண்கள் உள்பட 50 கலந்துகொண்டனர்.

Tags

Next Story
ai marketing future