மதுரையில் இந்து முன்னணியினர் தமிழக அரசின் திட்டத்தை எதிர்த்து பிரச்சாரம்

மதுரையில் இந்து முன்னணியினர் தமிழக அரசின் திட்டத்தை எதிர்த்து பிரச்சாரம்
X
மதுரையில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா  சுப்பிரமணியன் துண்டு பிரசுரம் வழங்கி பிரசாரம் செய்தார்.
மதுரையில் இந்து முன்னணியினர் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் தமிழக அரசிற்கு எதிராக பிரச்சாரம் செய்தனர்.

தமிழக அரசு கோயில்களில் உள்ள பழைய நகைகளை டெல்லியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான ஆலையில் உருக்கி, கோயில் பெயரில் வங்கிகளில் டெபாசிட் செய்ய திட்டமிட்டுள்ளது.

இதைக் கண்டித்து, இந்து முன்னணியினர், தமிழகத்தில் கோயில் பகுதிகளில், விழிப்புணர்வு பிரசுரங்களை பொது மக்களிடம் வழங்கியும், இந்த திட்டத்தை, தமிழக அரசு கைவிடக் கோரியும் பிரசாரங்களை செய்து வருகிறார்கள்.

இந்த திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிடக் கோரி, மதுரையில் மீனாட்சியம்மன் கோயில் அருகே இந்து முன்னணியினர், இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில், மாவட்டத் தலைவர் அழகர்சாமி, மாணிக்க மூர்த்தி, சதீஷ் ஆகிய நிர்வாகிகள் முன்னிலையில் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Tags

Next Story
ai in future agriculture