/* */

மதுரையில் ரத யாத்திரை தொடர்பான வழக்கை ரத்து செய்த உயர்நீதிமன்றம்

மதுரையில் ரதயாத்திரை நடத்தியதாக 94 பேர் மீது தொடுக்கப்பட்ட வழக்கை மதுரை உயர்நீதிமன்றக்கிளை ரத்துசெய்து உத்தரவிட்டது

HIGHLIGHTS

மதுரையில் ரத யாத்திரை தொடர்பான வழக்கை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
X

பைல் படம்

ராமர் கோவில் கட்ட ரத யாத்திரை நடத்தி 92 பேர் மீதான வழக்கு ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்திரவிட்டது.

ராமர் கோவில் கட்ட ரதயாத்திரை கடந்தவருடம் வந்தது. மதுரையில் இதற்கு முறைப்படி அனுமதி பெறப்பட்டது. ஆனால், ரத யாத்திரையின் போது பாரதிய ஜனதா கட்சியினர், ஆர். எஸ். எஸ் அமைப்பினர்கள் தொன்னூற்று நான்கு பேர் மீது அனுமதி இன்றி கூடியது, சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை ஏற்படுத்தியது, பிரிவினையை தூண்டியது உட்பட பல பிரிவுகளில் மதுரை கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இவர்கள் அனைவரும் தங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி மதுரை உயர் நீதிமன்றம் கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்ட பட்ட தொன்னூற்று நான்கு பேர்கள் சார்பில் வழக்கறிஞர்கள். கௌரிசங்கர், முத்துக்குமார் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி , ரத யாத்திரைக்கு உரிய அனுமதி பெற்றும், போலீசார் எவ்வித முகாந்திரமும் இல்லாமல் தொன்னூற்று நான்கு பேர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பி தொன்னோற்று நான்கு பேர்கள் மீதான வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.

Updated On: 30 April 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு மீண்டும் கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள்:...
  4. நாமக்கல்
    விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்து மானியத்திட்டங்கள் பெற அழைப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  6. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  7. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  9. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  10. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...