மதுரையில் 22 கிலோ கஞ்சா பறிமுதல் 4 நபர்கள் கைது

மதுரையில் 22 கிலோ கஞ்சா பறிமுதல் 4 நபர்கள் கைது
X

கஞ்ச விற்றதாக கைது செய்யப்பட்டவர்கள்

மதுரை சிலைமான் பகுதியில் கஞ்சா விற்ற 4 பேர் கைது அவர்களிடம் இருந்து 22 கிலோ கஞ்சா பறிமுதல்

மதுரை மாவட்டம் சிலைமான் பகுதியில் கஞ்சா விற்பதாக மதுரை போதை பொருள் ஒழிப்பு தனிப்படை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலின் அடிப்படையில் தனிப்படை உதவி ஆய்வாளர் நாகநாதன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் நடத்திய சோதனையில் விளாங்குடி சேர்ந்த விக்னேஸ்வரன், கல் மேடை சேர்ந்த சரவணன் ,மற்றும் தேனியை சேர்ந்த செல்வம், மோகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர் .அவர்களிடம் இருந்து 22 கிலோ கஞ்சா மற்றும் விற்பனை செய்த ரூபாய் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் கஞ்சா விற்பனை செய்த குற்றவாளி 4 பேரையும் சிலைமான் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

Tags

Next Story
கடனை தவிர்க்க AI உங்களுக்குத் துணை!