மதுரையில் பலகாரம் தயாரிக்கும் குடோனில் தீ விபத்து
மதுரையில் பலகாரம் தயாரிக்கும் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, இதில் யாருக்கும் பாதிப்பு உண்டாகவில்லை.
HIGHLIGHTS
மதுரை ஜெய்ஹிந்த்புரம் ராமையா தெரு, 13-வது குறுக்கு தெருவில் பாக்யராஜ் என்பவர், மிச்சர் உள்ளிட்ட பலகாரங்கள் செய்து, கடைகளுக்கு விநியோகம் செய்யும் தொழில் நடத்தி வருகிறார். இன்று காலை, நான்கு முப்பது மணி அளவில் மிக்சர் மற்றும் பலகாரம் பொருட்கள் தயாரிக்கும் குடோனில், புகை வருவதை அப்பகுதி மக்கள் பார்த்தனர். அருகே சென்று பார்த்தபோது, தீ மளமளவென எரிந்து கொண்டு இருந்தது
உடனடியாக அப்பகுதி மக்கள் மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு இரண்டு வாகனங்களில் சென்ற நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர், ஒருமணி நேரம் போராடி, தீயை அணைத்தனர். மதுரை மாவட்ட உதவி அலுவலர், இது குறித்து விசாரணை மேற்கொண்டார். தீ விபத்து குறித்து, மதுரை ஜெயந்திபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.