/* */

கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: விழிப்புணர்வு முகாம்

காவல்துறை சார்பில் பெண் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் பாலியல் குற்றங்களை தடுப்பது குறித்த விழிப்புணப்வு முகாம்

HIGHLIGHTS

கள்ளர் மேல்நிலைப்பள்ளியில்  பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: விழிப்புணர்வு முகாம்
X

கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் காவல்துறை சார்பில் நடந்த விழிப்புணர்வு முகாம்

கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

மதுரை மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் பாலியல் குற்றங்களை தடுப்பது சம்பந்தமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்த மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் பொன்னி, அறிவுறுத்தலின் பேரில் ,மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் இது குறித்தான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி,மதுரை மாவட்டம், உசிலம்பட்டி உ ளகோட்டம், செக்காணூரனி கள்ளர் அரசு மேல் நிலைப்பள்ளியில் , மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் பொன்னி, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் ஆகியோரது தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் பாலியல் குற்றங்கள் குறித்தும், பெண் கல்வி பேணுதல், சமூகத்தில் பெண்களின் நிலை குறித்தும், பெண்களுக்கு சமூகத்தில் உள்ள பொறுப்பு குறித்தும், சமூக கட்டமைப்பில் பெண்களின் பங்களிப்பு குறித்தும், பாலியல் குற்றங்களை தடுப்பது குறித்தும், எந்தெந்த வகையில் தடுக்கலாம் என்பது குறித்தும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் சட்டம் குறித்தும்,பெண் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் பாலியல் குற்றங்கள் எந்த வகையில் அவர்களை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது என்பது குறித்தும்,

பெண் குழந்தைகளுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பது குறித்தும் அதில் பெற்றோர்களின் பொறுப்பு குறித்தும்,குழந்தை திருமண தடைச் சட்டம் குறித்தும், பெண் குழந்தைகளுடைய கவனம் எந்தெந்த வகையில் திசை திருப்பப்படுகிறது என்பது குறித்தும், அதனால் ,ஏற்படும் பாதிப்பு குறித்தும்,உசிலம்பட்டி பகுதியில் பெண் சிசு கொலை அவ்வப்போது நிகழ்கின்றன என்றும், பெண் குழந்தைகளை வளர்க்க இயலாத பெற்றோர்கள் தங்கள் பெண் சிசுக்களை தமிழக அரசின் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கலாம் என்பது குறித்தும்,

பாலியல் குற்றங்கள் நிகழும்போது அதனை தடுப்பது குறித்தும் மதுரை சரக காவல்துறை துணைத்தலைவர் அவர்களும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் விரிவாக எடுத்துரைத்தார்கள்.மேலும், இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் சந்திரமௌலி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர், பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு, நல்லு காவல் துணைக் கண்காணிப்பாளர் உசிலம்பட்டி உட்கோட்டம, காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 6 Feb 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. திருவள்ளூர்
    தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் படுகாயம்
  7. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  8. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  9. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  10. இந்தியா
    சென்னை ஐ.ஐ.டி.,யின் பறக்கும் டாக்ஸி!