கழிவு நீரை அகற்ற லஞ்சம்: மாநகராட்சி உதவிப் பொறியாளர் கைது

மதுரையில் கழிவு நீரை அகற்ற லஞ்சம் கேட்ட மாநகராட்சி உதவி பொறியாளரை கையும் களவுமாக கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறையினர்:

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
கழிவு நீரை அகற்ற லஞ்சம்: மாநகராட்சி உதவிப் பொறியாளர் கைது
X

லஞ்சம் வாங்கி பிடிபட்ட உதவிப் பொறியாளர் விஜயகுமார் 

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 56 பொன்னகரம் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது வீட்டின் முன்பு நீண்ட நாட்களாக கழிவுநீர் தேங்கியிருந்துள்ளது. இதுகுறித்து, மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தொடர்ந்து இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ளாமல் இருந்ததோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் வீட்டின் முன் கழிவு நீர் தேங்கி இருந்ததோடு துர்நாற்றம் இருந்ததால் நோய் தொற்று பரவு அபாயம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், பொன்னகரம் வார்டு மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் உதவி பொறியாளர் விஜயகுமார் கணேசன் வீட்டின் முன்பாக தேங்கியிருக்கும் கழிவு நீரை அகற்ற பத்தாயிரம் ரூபாய் பணம் வேண்டும் என லஞ்சம் கேட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத கணேசன் இந்த விவகாரம் குறித்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புத்துறையினர் அறிவுறுத்தலின் பேரில், கணேசன் 56 ஆவது வார்டு மாநகராட்சி அலுவலகத்தில் உதவி பொறியாளர் விஜயகுமாருக்கு பத்தாயிரம் ரூபாய் பணத்தை லஞ்சமாக கொடுத்த போது அதனை விஜயகுமார் பெற்றபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக உதவி பொறியாளரை பிடித்து கைது செய்தனர்.

Updated On: 30 Sep 2023 5:53 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நோய் வராமல் தடுக்க கொசு மருந்து அடிக்கும் பணி...
  2. ஈரோடு
    கோபி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 80 வயது முதியவர் கைது
  3. சென்னை
    வெள்ளத்தில் சிக்கிய தந்தையை தேடி சென்ற மகன் உயிரிழப்பு: இது சென்னை...
  4. விளையாட்டு
    அலங்காநல்லூரில் கிரிக்கெட் ஸ்டேடியம் போல் ரூ.44 கோடியில் ஜல்லிக்கட்டு...
  5. நீலகிரி
    குன்னூர் அருகே மலைச்சரிவில் ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட காட்டெருமைகள்
  6. கரூர்
    கரூரில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்ட வெள்ள நிவாரண பொருட்கள்
  7. தர்மபுரி
    tதர்மபுரி அருகே குடிநீர்கேட்டு இரண்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
  8. கோயம்புத்தூர்
    புயல் பாதிப்பு: கோவையில் இருந்து சென்னைக்கு 1 டன் காய்கறி, 1.5 டன்...
  9. பல்லடம்
    பொதுமக்கள் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்த பல்லடம் மின்வாரியம்...
  10. இந்தியா
    எய்ம்ஸ் கண்டறிந்த பாக்டீரியா சீன நிமோனியாவுடன் தொடர்பு: மத்திய அரசு...