மதுரை மாவட்டத்தில் 63 சதவீத வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளது: போலீஸ் எஸ்.பி

மதுரை மாவட்டத்தில் 63 சதவீத வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளது: போலீஸ் எஸ்.பி

மதுரை மாவட்ட எஸ்பி பாஸ்கரன்

மதுரை மாவட்ட காவல் துறையின் அதிரடி நடவடிக்கையால் கடந்த ஆண்டு கொலை வழக்கு உட்பட பல்வேறு குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன

மதுரை மாவட்டத்தில் கடந்த ஆண்டிவ் 63 சதவீதம் வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் எஸ்.பி தெரிவித்தார்.

மதுரை மாவட்ட காவல் துறையின் அதிரடி நடவடிக்கையால் இந்த ஆண்டு கொலை வழக்கு உட்பட பல்வேறு குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பபாளர் வி.பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

கொலை வழக்குகள்:இந்த ஆண்டு இதுவரை 63 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 162 எதிரிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு 67 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 232 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்பொழுது 4 வழக்குகள் குறைவாக பதிவாகியுள்ளன.

குண்டர் தடுப்பு சட்டம்: மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை போதை கடத்தல் மற்றும் விற்பனை செய்தவர்கள் 7 பேர், மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் 2 பேர், சட்ட ஒழுங்கு பிரச்சினைகளில் ஈடுபட்டவர்கள்-18 பேர், திருட்டு, வழிப்பறி குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் -7 பேர் உட்பட மொத்தம் 34 பேர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த 2020-ம் ஆண்டு 32 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இரண்டு பேர் கூடுதலாக குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள்:

இந்த ஆண்டு இதுவரை கூட்டுக் கொள்ளை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்ற வழக்குகளில் பதிவான 709 வழக்குகளில் 444 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு 938 எதிரிகளை கைது செய்து 2,10,68,763 (ரூபாய் இரண்டு கோடி பத்து லட்சத்தி அறுபத்தி எட்டாயிரத்தி எழு நூற்று அறுபத்து மூன்று) ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அறிக்கையான திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் 63% வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு அறிக்கையான திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் 43 % வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த ஆண்டை விட 2021-ம் ஆண்டில் 20% அதிகமான வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்ற வழக்குகள் (Pocso Act):

இந்த ஆண்டு இதுவரை குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்ற வழக்குகள் 113 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 148 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பதிவு செய்யப்பட்ட அனைத்த Pocso வழக்குகளிலும் எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கெதிரான குற்றங்களை குறைக்க அதிக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

பெண்களுக்கெதிரான குற்ற வழக்குகள்:

இந்த ஆண்டு இதுவரை பெண்களுக்கெதிரான குற்ற வழக்குகளில் 419 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 585 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் வழக்குகள்:

இந்த ஆண்டு போதைப்பொருள் தடுப்பு குற்றத்தில் 240 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 344 எதிரிகள் கைது செய்யப்பட்டு ரூபாய் 1,09,83,000 (ஒரு கோடி ஒன்பது லட்சம் என்பத்தி மூன்றாயிரம்) மதிப்புள்ள 1098 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

புகையிலை பொருட்கள் வழக்குகள்:

இந்த ஆண்டு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை செய்த வழக்குகளில் 560 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 578 எதிரிகளை கைது செய்து ரூபாய் 18,45,063 (ரூபாய் பதினெட்டு லட்சம் நாற்பத்தி ஐந்தாயிரத்து அறுபத்து மூன்று )மதிப்புள்ள 2639 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சட்ட விரோதமான மதுபான விற்பனை:

இந்த ஆண்டு சட்ட விரோதமாக மதுபானம் விற்பணை செய்த வழக்குகளில் 4470 வழக்குகள் பதிவு செய்யபட்டு 4498 எதிரிகளை கைது செய்து 14811 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மணல் திருட்டு:

இந்த ஆண்டு சட்ட விரோதமாக ஆற்று மணல் திருட்டு மற்றும் கடத்தல் சம்மந்தமாக 188 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 403 எதிரிகள் கைது செயயப்பட்டு 280 வாகனங்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளது. இதில் இரு நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்ட விரோதமாக லாட்டரி டிக்கெட்டுகள் விற்பன:

இந்த ஆண்டு லாட்டரி டிக்கெட்டுகள் விற்பணை செய்ததில் 37 வழக்குகள் பதிவு செய்யபட்டு 51 எதிரிகள் கைது செய்யப்பட்டு ரூபாய் 5,95,090 (ரூபாய் ஐந்து லட்சத்து தொண்ணூற்றி ஐந்தாயிரத்து தொண்ணூறு) பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பணம் வைத்து சூதாட்டம்:

இந்த ஆண்டு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களில் 131 வழக்குகள் பதிவு செய்து 712 எதிரிகள் கைது செய்யபட்டுள்ளனர்.

2021-ம் ஆண்டு தண்டனை பெற்ற முக்கிய வழக்குகள்:

இந்த ஆண்டு கொலை வழக்கில்-1, குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்ற வழக்குகளில் 6, கற்பழிப்பு வழக்கில்-1, வரதட்சணை மரணம் வழக்கில்-1, வழிப்பறி வழக்கில்-2 உட்பட மொத்தம் 5337 வழக்குகளில் நீதிமன்றம் மூலம் எதிரிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மதுரை காவல் மாவட்டத்தில் இரண்டு காவல் நிலைய புதிய கட்டிடங்கள் (மேலூர் மற்றும் ஆஸ்டின்பட்டி காவல் நிலையங்கள்) புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. மேலும், ஆஸ்ட்டின்பட்டி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட நிலையூர் மற்றும் மேலவளவு காவல் நிலைய எல்கைக்குட்பட்ட சேக்கிபட்டி ஆகிய இரு இடங்களில் புறக்காவல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் நடைபெறும் இடங்களில் புதிததாக 453 CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டு குற்ற செயல்களை தடுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிமீறல் வழக்குகள்:

இந்த ஆண்டு சாலை விதிகளை மீறுவோர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதில் மது அருந்தி வாகனம் ஓட்டியவர்கள் மீது -1499 வழக்குகள், ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டியவர்கள் மீது - 9483 வழக்குகள் உட்பட 778207 (ஏழு லட்சத்தி எழுபத்தி எட்டாயிரத்தி இரு நூற்று ஏழு வழக்குகள்) மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளது. வரும் புத்தாண்டிலும் மதுரை மாவட்ட காவல்துறை விவேகமாகவும், துரிதமாகவும் செயல்பட்டு குற்றங்கள் நடவாமல் தடுப்பதில் மிகுந்த அக்கறையுடன் செயல்படும் என்பதுடன், பொது மக்கள் அனைவருக்கும் மதுரை மாவட்ட காவல்துறை சார்பாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.பாஸ்கரன் புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story