பொதுத்துறை நிறுவனங்களை, தனியாரிடம் ஒப்படைப்பதை எதிர்த்து, எஸ்.ஆர்.எம்.யூ. ஆர்ப்பாட்டம்

பொதுத்துறை நிறுவனங்களை, தனியாரிடம் ஒப்படைப்பதை எதிர்த்து, எஸ்.ஆர்.எம்.யூ. ஆர்ப்பாட்டம்
X
ரயில்வே மற்றும் பொதுத் துறைகள் தனியாருக்கு தாரை வார்ப்பதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

பொதுத்துறை நிறுவனங்களை,மத்திய அரசு தனியாரிடம் ஒப்படைக் கூடாது என வலியுறுத்தி மதுரையில் எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மேற்கு ரயில்வே நுழைவு வாயில் அருகே எஸ். ஆர். எம். யூ சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, எஸ்.ஆர்.எம்.யூ. மதுரை கோட்ட செயலர் ரபிக் தலைமை வகித்தார்.

இந்திய ராணுவத்திற்கு தேவையான தளவாடங்கள் தயாரிக்கும் அரசின் தொழிற்சாலைகளை, கார்ப்பரேஷன் ஆக மாற்ற முயற்சிக்கும் மத்திய அரசைக்கண்டித்து ரயில்வே தொழிலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். பொதுத்துறை நிறுவனங்களை,மத்திய அரசு தனியாரிடம் ஒப்படைக் கூடாது என தொழிற்சங்கத்தினர்,மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். இதில், உதவி கோட்டச் செயலாளர் ராம்குமார் மற்றும் அமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பங்கேற்றனர்.

Tags

Next Story
ai in future agriculture