மதுரை வைகையில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்: பொதுமக்களுக்கு அபாய எச்சரிக்கை

மதுரை வைகையில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்: பொதுமக்களுக்கு அபாய எச்சரிக்கை
X
வைகை ஆற்றங்கரை ஓரம் இருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர். போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரி நீர் மதுரை வந்தடைந்த நிலையில், கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே, உள்ள வைகை அணை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய பாசன முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது.நீர்பிடிப்பு பகுதியில் பெய்ததொடர் மழையாலும், பெரியார் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாலும் ,

வைகை அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வந்தது. தற்போது ,வைகை அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் , அணைக்கு வரும் 1000 கன அடி தண்ணீர் அப்படியே மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் திறக்கப்பட்ட தண்ணீரானது இன்று மதுரை யானைக்கல் பாலம் அருகே வந்தடைந்தது.

இதனால் , மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் மதுரை வைகை ஆற்றங்கரை ஓரம் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வைகை ஆற்றுக்குள் ஆடு மாடுகளை பொதுமக்கள் மேய்த்து வருகின்றனர். ,துணிகளை துவைத்து வருகின்றனர். வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆடு மாடு மற்றும் துணி துவைப்பது உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை அறிவிப்பு செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கோடைகாலம் தொடங்கும் முன்பே ஈரோட்டில் கொளுத்திய வெயில் : 100 டிகிரி பதிவு...மக்கள் கடும் அவதி!