சிவகாசி கோட்டத்தில் நாளை மின்நிறுத்த பகுதிகள் அறிவிப்பு

பைல் படம்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி கோட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை, செவல்பட்டி, ந.சுப்பையாபுரம், சாத்தூர், கங்கரக்கோட்டை ஆகிய 5 துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின் நிலையங்களில் இருந்து பயன்பெறும் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்தடை ஏற்படும் என்று சிவகாசி மின்வாரிய செயற்பொறியாளர் பாபநாசம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாளை துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், வெம்பக்கோட்டை, சூரார்பட்டி, கோட்டைப்பட்டி, சல்வார்பட்டி, கே.மடத்துப்பட்டி, தாயில்பட்டி, விஜயகரிசல்குளம், பனையடிப்பட்டி, சங்கரபாண்டியபுரம், செவல்பட்டி, அப்பையநாயக்கன்பட்டி, குகன்பாறை, குருமூர்த்திநாயக்கன்பட்டி, உப்பத்தூர், இனாம்மீனாட்சிபுரம், சக்கம்மாள்புரம், அம்மையார்பட்டி, துலுக்கன்குறிச்சி, ந.சுப்பையாபுரம், நள்ளி, கரிசல்பட்டி, தொட்டிலோவன்பட்டி, கரிசல்பட்டி, பெத்துரெட்டியாபட்டி, இ.ரெட்டியாபட்டி சாத்தூர், மேட்டமலை, படந்தால், வெங்கடாசலபுரம், ஒத்தையால், சடையம்பட்டி, ஓ.மேட்டுப்பட்டி, அமீர்பாளையம், பெரியகொல்லபட்டி, சின்னகொல்லபட்டி, கிருஷ்ணாபுரம், கீழசெல்லையாபுரம், சாணார்குளம், கோவில்செல்லையாபுரம், ஊத்துப்பட்டி, ரெட்டியாபட்டி, ஏழாயிரம்பண்ணை, வெள்ளையாபுரம், பனையடிப்பட்டி, புல்லக்கவுண்டன்பட்டி, அன்பின்நகரம், எலுமிச்சங்காய்பட்டி, மார்க்கநாதபுரம், தூங்காரெட்டியபட்டி, நாரணாபுரம், பந்துவார்பட்டி, புதுசூரங்குடி, கம்மாசூரங்குடி, மேலப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu