/* */

திமுக தேர்தல்அறிக்கையை நிறைவேற்றியதில்லை- செல்லூர்ராஜூ

திமுக தேர்தல்அறிக்கையை நிறைவேற்றியதில்லை- செல்லூர்ராஜூ
X

தேர்தல் அறிக்கையில் சொன்னவற்றை நிறைவேற்றியதாக திமுகவிற்கு வரலாறு கிடையாது என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் சட்டமன்ற தேர்தலுக்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள அதிமுக கட்சி அலுவலகத்தை இன்று அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். இக்கூட்டத்தில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.தொடர்ந்து அப்பகுதியில் உள்ள தனியார் மஹால் ஒன்றில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர், ஆண்டுக்கு 6 சிலிண்டர் திட்டமும், இல்லத்தரசிகளுக்கு 1500 ரூபாய் திட்டமும் போதும் நாம் ஆட்சிக்கு வந்து விடுவோம். என்னைப்பற்றி பல மீம்ஸ்கள் எல்லாம் போடுவார்கள். அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன். அதிமுக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி என பேசினார்.

மேலும் திமுக அறிவித்துள்ள திட்டங்கள் எதையும் நிறைவேற்றியதாக வரலாறு கிடையாது.கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், நிறைவேற்ற முடியாத திட்டங்களை சொன்னார்கள். எனவே, திமுகவின் தேர்தல் அறிக்கையை மக்கள் பொருட்படுத்த மாட்டார்கள் என்றார்.

Updated On: 13 March 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  2. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை
  3. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.50 அடியாக சரிவு
  4. காஞ்சிபுரம்
    கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்..
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  8. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை
  9. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  10. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்