Begin typing your search above and press return to search.
டூவீலர் திருடிய 3 பேர் கைது
சூளகிரி அருகே இருசக்கர வாகனம் திருடிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்
HIGHLIGHTS
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹரன். இவர் இவருக்கு சொந்தமான பைக்கை காலை வேளையில் சூளகிரியில் இருந்து ஓசூர் செல்லும் சாலையில் உள்ள தனியார் வே பிரிட்ஜ் அருகே நிறுத்தி வைத்திருந்தார்.
அப்போது அங்கு வந்த ஓசூர் பகுதியை சேர்ந்த யாசின், சையத்நசீம், அக்சை ஆகிய 3 பேரும் ஹரிஹரனுக்கு சொந்தமான பைக்கை திருட முயற்சித்தனர். அப்போது அங்கிருந்தவர்கள் அவர்களை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து ஹரிஹரன் கொடுத்த புகாரின் பேரில் சூளகிரி போலீஸ் எஸ்.ஐ ராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.