/* */

கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 1.6 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: போலீசார் அதிரடி

கிருஷ்ணகிரியிலிருந்து கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 1.6 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 1.6 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: போலீசார் அதிரடி
X

ரேஷன் அரிசிகளை கடத்திய வீராசாமி.

கிருஷ்ணகிரி மாவட்ட உணவுபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி, எஸ்.ஐ., சிவசாமி, ஆகியோர் நேற்று இரவு கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே ஸ்கூட்டியில் சென்றவரை மடக்கினர். அதில் அவர் ரேஷன் அரிசியை கடத்தி சென்றது தெரிந்தது.

விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த வீராசாமி என்பதும், கிருஷ்ணகிரி நகர் பகுதிகளில் ரேஷன் அரிசி வாங்கி சேகரித்து கர்நாடகாவில் அதிக விலைக்கு விற்று வந்தது தெரிந்தது.

இதையடுத்து வீராசாமி அதே பகுதியில் 32 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த, 1,600 கிலோ ரேஷன் அரிசி மற்றும் ஸ்கூட்டியையும் பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 21 Sep 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  2. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  3. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  5. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  6. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  7. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  8. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்