/* */

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரம் கொள்ளை: கொள்ளையர்கள் கைவரிசை

ராயக்கோட்டை ரயில்வே காலனியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரம் கொள்ளை: கொள்ளையர்கள் கைவரிசை
X
கொள்ளை நடந்த வீடு.

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி ராணி (வயது 58). ரயில்வே துறையில் கேங்மேன் ஆக 14 வருடமாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் இரண்டு மாத சம்பள பணத்தை ரூ.60 ஆயிரத்தை பீரோவில் பூட்டி வைத்துவிட்டு வழக்கம்போல் ராணி பணிக்காக நேற்று இரவு 8 மணி அளவில் சென்று விட்டார். இன்று காலை 5 மணிக்கு சென்று பார்க்கும் பொழுது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் முழுவதும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதைப் பார்த்து ராணி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக ராயக்கோட்டை காவல் நிலையத்திற்கு கொள்ளை சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. கொள்ளை நடந்து நான்கு மணி நேரம் வரை தகவல் தெரிந்தும் காவல்துறை சார்பில் சம்பவ இடத்தை பார்த்து விசாரணை செய்யவில்லை என்று பணத்தைப் பறிகொடுத்த ராணி வேதனை தெரிவித்தார். இக்கொள்ளை சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

Updated On: 5 Dec 2021 8:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  3. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  6. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  7. லைஃப்ஸ்டைல்
    கஸ்தூரி மஞ்சளின் கொட்டிக் கிடக்கும் நன்மைகள் பற்றித் தெரியுமா?
  8. லைஃப்ஸ்டைல்
    கொடூர வலி தரும் சிறுநீரக கற்கள் வராமல் தடுப்பது எப்படி?
  9. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...
  10. லைஃப்ஸ்டைல்
    பிறை காணும் பெருநாளுக்கு வாழ்த்துச் சொல்வோமா..?