/* */

சூளகிரி அருகே கொட்டும் மழையில் எம்எல்ஏ கே.பி.முனுசாமி ஆய்வு

சூளகிரி அருகே கொட்டும் மழையில் துரை ஏரி உள்ளிட்ட பகுதிகளில் எம்எல்ஏ கே.பி.முனுசாமி ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

சூளகிரி அருகே  கொட்டும் மழையில் எம்எல்ஏ கே.பி.முனுசாமி ஆய்வு
X

துரை ஏரி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட வேப்பனஹள்ளி எம்எல்ஏவும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணையிலிருந்து இடதுபுற பிரதான கால்வாய் மூலம் உபரி நீர் துரை ஏரிக்கும், அங்கிருந்து கால்வாய்கள் அமைத்து சின்னார் அணைக்கும் நீர் கொண்டு செல்ல வேண்டுமென்பது விவசாயிகளின் நீண்டநாள் கனவாக உள்ளது.

தற்போது அணைகள் நிரம்பி, உபரி நீர் வீணாகும் சூழலில் விவசாயிகளின் கோரிக்கை ஏற்று வேப்பனஹள்ளி எம்எல்ஏவும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி, துரை ஏரி உள்ளிட்ட பகுதிகளில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

கெலவரப்பள்ளி அணையின் உபரி நீர் வரக்கூடிய மருதாண்டப்பள்ளி, வரதாபுரம் உள்ளிட்ட ஏரிகளை பார்வையிட்ட அவர், துரை ஏரியிலிருந்து சின்னார் அணைக்கு செல்லக்கூடிய கால்வாய்கள் சீரமைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

கால்வாய் செல்லக்கூடிய வழியில் இருந்த பட்டா நிலத்தின் உரிமையாளரிடம் பொதுமக்களின் நலனிற்காக 11 அடி அகலத்தில் கால்வாய் அமைக்க அனுமதி பெற்று தந்தார்.

ஏறக்குறைய சூளகிரி பகுதி மக்களின் கனவு நிறைவேற்ற ஆயத்தமாகியுள்ள நிலையில், கொட்டும் மழையிலும் மக்களுக்கு சேவையாற்ற வந்த எம்எல்ஏ கே.பி.முனுசாமியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Updated On: 12 Nov 2021 2:22 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  3. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  4. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  5. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  8. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  9. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!