/* */

பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த கிருஷ்ணகிரி அசோக்குமார் எம்எல்ஏ

கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிக்காரிமேடு பகுதியில், நரிகுறவர் இன மக்களிடம், அதிமுக எம்எல்ஏ., அசோக்குமார் குறைகளை கேட்டறிந்தார்.

HIGHLIGHTS

பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த கிருஷ்ணகிரி அசோக்குமார் எம்எல்ஏ
X

கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குருபரப்பள்ளி அருகே உள்ள சிக்காரிமேடு என்ற இடத்தில், அதிமுக எம்எல்ஏ., அசோக்குமார், நரிக்குறவ மக்களிடம் இன்று குறைகளைக் கேட்டார். அப்போது அப்பகுதி மக்கள், நீண்ட நாட்களாக இங்குள்ள சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் சாலையை அளந்து கொடுக்க வேண்டும். இங்கு சாக்கடைக் கால்வாய் வசதி இல்லை. புதிய சாக்கடைக் கால்வாயை கட்டித்தர வேண்டும் என்றனர்.

அத்துடன், பொது கழிப்பிடம் இல்லாததால், பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே பொது கழிப்பிட வசதியை ஏற்படுத்தித்தர வேண்டும் என்றனர். இது குறித்து பரீசிலித்து உடனே நடவடிக்கை எடுப்பதாக, அவர்களிடம் எம்.எல்.ஏ வாக்குறுதி அளித்தார். இந்நிகழ்ச்சியின் போது, மாவட்ட அதிமுக அவைத்தலைவர் காத்தவராயன், முன்னாள் பால்வளத் தலைவர் தென்னரசு, ஒன்றிய செயலாளர் சைலேஷ்கிருஷ்ணன், ஒன்றிய பொருளாளர் திம்மராஜ், ஜெல்கேசன், முருகன், ராஜி, சின்னஅனுமன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Updated On: 19 Sep 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  2. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  3. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  4. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  6. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  7. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  9. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!