/* */

கிருஷ்ணகிரி: வாகனத்தை வழிமறித்து லஞ்சம் - தலைமை காவலர் சஸ்பெண்ட்

குருபரப்பள்ளி அருகே குட்கா வாகனத்தை வழிமறித்து லஞ்சம் வாங்கிய தலைமை காவலரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரி: வாகனத்தை வழிமறித்து லஞ்சம் - தலைமை காவலர் சஸ்பெண்ட்
X

குருபரப்பள்ளி அருகே குட்கா வாகனத்தை வழிமறித்து லஞ்சம் வாங்கிய புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட தலைமை காவலர் மதியழகன். 

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி காவல் நிலைய தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் மதியழகன் . இவர், வாகனச்சோதனையின் போது குட்கா வாகனத்தை வழி மறித்து விசாரித்துள்ளார். குட்கா தொடர்பாக வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க, ரூ. 2.5 லட்சம் பணம், லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்துமாறு, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் உத்தரவிட்டார். அவருடைய உத்தரவின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், தலைமை காவலர் மதியழகன் பணம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, நேற்று அவர் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், இன்று அவரை பணியிடை நீக்கம் செய்து, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் உத்தரவிட்டார்.

Updated On: 2 Jun 2021 5:39 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  2. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  3. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  4. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ+ அங்கீகாரம் வழங்கியது நாக் அமைப்பு
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  6. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  7. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  8. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  9. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?