/* */

பைக்கில் வந்தவர்களை தாக்கிய குடிபோதை ஆசாமி கைது

வேப்பனப்பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை குடிபோதையில் பிளாஸ்டிக் பைப்பால் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்

HIGHLIGHTS

பைக்கில் வந்தவர்களை தாக்கிய குடிபோதை ஆசாமி கைது
X

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியை அடுத்த கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தில் இவரது நண்பர் ராஜகோபால் என்பவருடன் நேற்று இரவு குந்தாரப்பள்ளியை அடுத்த வி.மாதேப்பள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது குடிபோதையில் அங்கு வந்த சின்னசூலாமலை பகுதியை சேர்ந்த திம்மராஜ் என்பவர், ராஜ்குமார் மற்றும் ராஜகோபாலிடம் ஆபாசமாக பேசி அருகிலிருந்த பிளாஸ்டிக் பைப்பால் சரமாரியாக தாக்கி மிரட்டல் விடுத்தார். இதில் படுகாயமடைந்த இருவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதுகுறித்து வேப்பனப்பள்ளி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 13 May 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...