போச்சம்பள்ளி அருகே பாளேத்தோட்டத்தில் கோவில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை

போச்சம்பள்ளி அருகே பாளேத்தோட்டத்தில் கோவில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை
X
போச்சம்பள்ளி அடுத்த பாளேத்தோட்டம் பகுதியில் கோவில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை

போச்சம்பள்ளி அடுத்த பாளேத்தோட்டம் பகுதியில் கோவில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை : கோவில் பூசாரி விவசாய நிலத்தில் உண்டியலை வீசி சென்ற அவலம்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அருகே உள்ள பாளேத்தோட்டம் கிராமத்தில் உள்ள பழமைவாய்ந்த ஸ்ரீ செல்லியம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலில் கோவில் திருவிழா கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு திருவிழா நடந்து உண்டியல் பணம் எண்ணாமல் கிடப்பில் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து கோவில் கருவறையில் இருந்த உண்டியலை திருடிச்சென்று இந்த கோவில் பூசாரி பெரியசாமி என்பவரது விவசாய நிலத்தில் உண்டியலை மர்ம நபர்கள் வீசி சென்றனர். வழக்கம் போல் காலை கோவிலுக்கு பூசை சென்ற கோவில் பூசாரி பெரியசாமி கோவில் பூட்டை உடைத்து உண்டியல் திருடப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்து போச்சம்பள்ளி போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் வந்த போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai based agriculture in india