/* */

கிருஷ்ணகிரியில் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் கைது

சிங்காரப்பேட்டையில் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின் வாரிய அதிகாரிகள் 2பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரியில் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய  மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் கைது
X

சிங்காரப்பேட்டையில் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் கைது லஞ்ச ஒழிப்பு போலீசார் பொறி வைத்து பிடித்தனர். சிங்காரப்பேட்டையில் ரூ.7 ஆயிரம் லஞ்சம வாங்கிய மின் வாரிய அதிகாரிகள் 2பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

இது பற்றிய விவரம் வருமாறு: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா பெரிய தள்ளப்பாடியை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் தினகரன் (23). இவருக்கு சொந்தமாக 2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் ஒரு ஏக்கரில் பூந்தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறார். இவருடைய விவசாய கிணற்றில் மின் இணைப்பு பெறுவதற்காக கடந்த மே மாதம் சிங்காரப்பேட்டையில் உள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது உதவி மின் பொறியாளர் அலுவலக வணிக ஆய்வாளர் பட்டாபிராமன் (37) என்பவர் மின் இணைப்பு கொடுக்க வேண்டும் என்றால் தனக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று தினகரனிடம் கேட்டார்.

அவ்வளவு தொகை தன்னால் தர இயலாது என தினகரன் கூறினார். இறுதியாக ரூ.7ஆயிரம் தந்தால் மின் இணைப்பு தருவதாக பட்டாபிராமன் கூறினார். அந்த லஞ்ச பணத்தை கொடுக்க விரும்பாத தினகரன் இது குறித்து கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்புபோலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சேலம் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜன், கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சையத் சுல்தான் பாஷா மற்றும் போலீசார் சிங்காரப்பேட்டை உதவி மின் பொறியாளர் அலுவலகத்திற்கு சென்றனர்.

அங்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் வகுத்து கொடுத்த திட்டத்தின்படி தினகரன் லஞ்ச பணம் ரூ.7 ஆயிரத்தை வணிக ஆய்வாளர் பட்டாபிராமிடம் கொடுக்க முயன்றார். அவர் அந்த தொகையை உதவி வணிக ஆய்வாளர் சதாசிவம் (42) என்பவரிடம் கொடுக்க சொன்னார். அந்த பணத்தை சதாசிவம் பெற முயன்ற போது லஞ்ச ஒழிப்பு போலீசார் உள்ளே சென்று கையும், களவுமாக பிடித்தனர்.

பின்னர் வணிக ஆய்வாளர் பட்டாபிராமன், உதவி வணிக ஆய்வாளர் சதாசிவம் ஆகிய ௨ பேரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. சிங்காரப்பேட்டையில் மின் இணைப்பு வழங்க ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சம்பவத்தில் மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 30 Jun 2021 3:41 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க