/* */

தெருக்கூத்து கலைஞர்கள் மூலம் கொரோனா விழிப்புணர்வு

ஊத்தங்கரையில், தெருக்கூத்து கலைஞர்கள் மூலம், காவல்துறையினர் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

தெருக்கூத்து கலைஞர்கள் மூலம் கொரோனா விழிப்புணர்வு
X

ஊத்தங்கரை பகுதியில், கொரோனா விழிப்புணர்வு பணியில் ஈடுபட்ட தெருக்கூத்து கலைஞர்களை போலீசார் பாராட்டினர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி காவல்துறையின் சார்பில், காவல் ஆய்வாளர் முத்தமிழ்செல்வன் அறிவுறுத்தலின்படி, கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கல்லாவி தெருக்கூத்து கலைஞர்கள் மூலமாக நடத்தப்பட்ட விழிப்புணர்வு நாடகத்தில், அசுரன் வேடம் மற்றும் எமதர்மன் வேடம் அணிந்து, கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். தெருக்கூத்து பாடல்கள் மூலமாக, விலகி இருப்போம், வீட்டில் இருப்போம், கைகழுவுவோம், கட்டாயம் முகக்கவசம் அணிந்து வெளியே வரவேண்டும்; தேவையின்றி வெளியே வரக்கூடாது எனவும் பாடல்கள் மூலமாக கூறினர்.

கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவிய சூழலில் நம்மை நம்மால் மட்டுமே காப்பாற்றிக் கொள்ள முடியும். அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று, நாடகக் கலைஞர்கள் கூறினர். காவல்துறையின் சார்பில் இது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு, பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Updated On: 17 Jun 2021 6:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  3. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  4. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  5. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  6. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  7. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  8. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  9. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்